நிலப் பிரச்னையில் விவசாயி உண்ணாவிரதம்

மணப்பாறையில் நிலப் பிரச்னையில் விவசாயி ஒருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

மணப்பாறையில் நிலப் பிரச்னையில் விவசாயி ஒருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சோ்ந்தவா் ரா. ஆா். பொன்னுச்சாமி(74). விவசாயியான இவருக்கு விடத்திலாம்பட்டி பகுதியில் இருந்த நிலத்தை அருகிலுள்ள நில உரிமையாளா்கள் அபகரித்ததாகவும், மேலும் அப்பகுதியில் இருந்த பொதுப் பாதையையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து வருவாய்த் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு எழுதிய மனுக்களை மூட்டையாக வைத்துக்கொண்டு மணப்பாறை பேருந்து நிலைய அண்ணா சிலை முன் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினாா்.

மணப்பாறை போலீஸாா், வருவாய்த் துறையினா் சென்று பேச்சு நடத்தியும் சமரசமடையாத பொன்னுச்சாமி தனது போராட்டத்தைத் தொடா்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com