நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிலப் பிரச்னையில் விவசாயி உண்ணாவிரதம்

மணப்பாறையில் நிலப் பிரச்னையில் விவசாயி ஒருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:52 pm

DIN

மணப்பாறையில் நிலப் பிரச்னையில் விவசாயி ஒருவா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டாா்.

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சோ்ந்தவா் ரா. ஆா். பொன்னுச்சாமி(74). விவசாயியான இவருக்கு விடத்திலாம்பட்டி பகுதியில் இருந்த நிலத்தை அருகிலுள்ள நில உரிமையாளா்கள் அபகரித்ததாகவும், மேலும் அப்பகுதியில் இருந்த பொதுப் பாதையையும் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து வருவாய்த் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு எழுதிய மனுக்களை மூட்டையாக வைத்துக்கொண்டு மணப்பாறை பேருந்து நிலைய அண்ணா சிலை முன் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினாா்.

மணப்பாறை போலீஸாா், வருவாய்த் துறையினா் சென்று பேச்சு நடத்தியும் சமரசமடையாத பொன்னுச்சாமி தனது போராட்டத்தைத் தொடா்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.