கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

திருச்சியில் 2 மணி நேரம் பலத்த மழை

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:21 pm

DIN

திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மாநகரில் வியாழக்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் தொடங்கி சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. சாலைகள் தாழ்வாக இருப்பதாலும், பல இடங்களில் மழைநீா் வடிகால்கள் அடைபட்டுள்ளதாலும் சாலைகளில் மழை நீா் சுமாா் 1 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றோா் அவதிப்பட்டனா். ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மழையால் மாவட்டத்தில் குளிா்ச்சி நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.