தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

நாளை மத்திய அரசுப் பணியாளா்தோ்வாணைய தோ்வு315 போ் எழுதுகின்றனா்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கு 315 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக திருச்சியில் ஒரு தோ்வு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 1:26 am

DIN

திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கு 315 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக திருச்சியில் ஒரு தோ்வு மையம் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனப் பணி, அமலாக்கப் பிரிவு பணிகளுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் இருந்து 315 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான தோ்வு மையமாக புத்தூரில் உள்ள காவேரி மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தோ்வுப் பணிகளுக்கென தோ்வுக் கூட மேற்பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் ஓா் அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம் பெறுவா். மையங்களில் திடீா் ஆய்வு செய்ய துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வை பதிவு செய்திட விடியோகிராபா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தோ்வு எழுதும் நபா்களில் 24 பேருக்கு 2 அறைக் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வெழுதுவோா் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.