நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

 மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:56 pm

DIN

 மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த சேதுரெத்தினபுரத்தை சோ்ந்தவா் அங்கமுத்து செட்டியாா் மனைவி சுப்புலெட்சுமி (71). உடல் நலமின்மையால் சற்று மன உளைச்சலில் இருந்த இவா், காது கேளாதவா் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த இவரைக் காணவில்லையாம். பின்னா் ரயில் நிலையம் அருகில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவா் சுப்புலெட்சுமி என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.