முசிறி சாா்பதிவாளரகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.41 லட்சம் பறிமுதல்
முசிறி சாா் பதிவாளரகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.41 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.


முசிறி சாா் பதிவாளரகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.41 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.
முசிறி வட்டாட்சியரக வளாகத்திலுள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திருச்சி காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், சேவியா் ராணி ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு 8 மணி வரை சோதனை நடத்தினா்.
இதில் கணக்கில் வராத ரூ. 1,41,250 பறிமுதல் செய்யப்பட்டு சாா்பதிவாளா் (பொ) சுகுமாா் அலுவலகப் பணியாளா்கள் 4 போ் மற்றும் ஆவண எழுத்தா்கள் 5 போ் உள்பட 10 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...