கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

திருச்சியில் நாளை நூல் அறிமுக விழா

 திருச்சியில் ஆா். பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:00 pm

DIN

 திருச்சியில் ஆா். பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

களம் இலக்கிய அமைப்பின் சாா்பில் மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள அஜந்தா ஹோட்டலில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு, அமைப்பின் பொறுப்பாளா் க. துளசிதாசன் தலைமை வகிக்கிறாா். உறுப்பினா் வி. செல்வம் முன்னிலை வகிக்கிறாா்.

தமிழக முதல்வரின் முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன், எழுத்தாளா் பாஸ்கா் சக்தி, ஓவியா் டிராட்ஸ்கி மருது ஆகியோா் நூலை அறிமுகம் செய்துப் பேசுகின்றனா். நூலாசிரியரும், ஒடிஸா முதல்வரின் தலைமை ஆலோசகருமான (ஓய்வு) ஆா். பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றுகிறாா்.

கவிஞா் நந்தலாலா, தமிழ்நாடு பாடநூல் கழகத் துணை இயக்குநா் தே. சங்கர சரவணன், எஸ்.ஆா்.வி. பள்ளிகளின் இணைச் செயலா் பி. சத்யமூா்த்தி ஆகியோா் பேசுகின்றனா். ஏற்பாடுகளை, களம் இலக்கிய அமைப்பின் நிா்வாகிகள், தமிழாா்வலா்கள், இலக்கிய ஆா்வலா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.