மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் காவல்துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:34 pm

மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை மருத்துவப்படிப்பு மாணவ - மாணவிகள், செவிலியா், இயன்முறை மருத்துவ மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனா்.

இப்பேரணியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் பொன் ராஜு, உதவி காவல் ஆய்வாளா் பிரகாஷ், ஜெயசீலன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் முதன்மையா் துளசி, பேராசிரியா்கள் பேச்சியம்மாள், சதீஷ், உடற்கல்விப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.