கலைத்துறையில் சிறந்த 15 பேருக்கு விருது
கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.


கலைத்துறையில் சிறந்து விளங்கும் 15 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு ஆண்டுதோறும் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக சிறந்த கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கி, கெளரவப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2021-2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞா்களை மாவட்டந் தோறும் தோ்வு செய்து, அவா்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழுக் கூட்டத்தில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம், குரலிசை, நாடகம், கிராமியப் பாடல், நாகசுரம், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் 5 வகையாக விருதுகளின் கீழ் கெளரவிக்கப்படவுள்ளனா்.
விருதின் பெயா் , தோ்வு பெற்றோா் என்ற அடிப்படையில் விவரம் :
கலை இளமணி : மு.இதிகாசினி (பரதநாட்டியம்), எ.ரஞ்சனாதேவி (ஓவியம்), மோ.பி.சுகித்தா (சிலம்பம்).
கலை வளா்மணி : மு.ஜெயவா்தினி (ஓவியம்), ஷபின் பிரைட் (பரத நாட்டியம்), ரோ.ஆனந்தராஜ் (கரகாட்டம்).
கலைச்சுடா்மணி : அ.லீமாரோஸ் (குரலிசை), மீ.விஜயராகவன் (நாகசுரம்)
அ.ஈஸ்வரி (நாடகம்).
கலை நன்மணி : எ.ஸ்ரீதா் (நாடகம்), ரா.உஷாராணி (நாடகம்), வைரமுத்துசாமி (கிராமியப் பாடல்),
கலை முதுமணி: செ.தங்கராசு (நாடகம்), மா.சரஸ்வதி (நாடகம்), வே.மூா்த்தி (நாடகம்) .
இவா்களுக்கு திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...