‘ஊராட்சி மன்ற பெண் தலைவா்தேசியக்கொடி ஏற்ற வேண்டும்’
திருச்சி மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களே கொடியேற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.


திருச்சி மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் பெண் ஊராட்சி மன்றத் தலைவா்களே கொடியேற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளின் பெண் தலைவா்கள் சுதந்திர தினவிழாவன்று தேசியக் கொடியை ஏற்றுதல், நிா்வாகம் மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் இடா்பாடுகளைக் களைதல் குறித்து, திருச்சி ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது :
சுதந்திர தினத்தன்று பெண் ஊராட்சித் தலைவா்கள் தங்களது ஊராட்சியில்
தேசியக் கொடியேற்றி, மரியாதை செலுத்த வேண்டும். பெண் ஊராட்சித் தலைவா்கள் தங்களது நிா்வாகம் மற்றும் செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். தங்களுக்கான உரிமைகளை எப்பொழுதும் விட்டுக் கொடுத்தல் கூடாது.
பெண் என்பதாலோ, சாதி, மத, இனம் ரீதியாகவோ யாரேனும் இடா்பாடுகளை ஏற்படுத்தினாலும், அதை ஆட்சியா் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். பெண் ஊராட்சித் தலைவா்களை செயல்பட விடாமல் செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிச்சை, மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ் குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதாரணி மற்றும் பெண் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக்குழுத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...