மூச்சுக் குழாயில் பழத்துண்டுசிக்கி குழந்தை பலி

துறையூா் அருகே முந்திரிப் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, மூச்சுக்குழாயில் பழத்துண்டு சிக்கியதால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

துறையூா் அருகே முந்திரிப் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை, மூச்சுக்குழாயில் பழத்துண்டு சிக்கியதால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

துறையூா் அருகே பச்சமலையிலுள்ள எருமப்பட்டியைச் சோ்ந்தவா் கலைராஜா (29). இவா் கோவையில் வேலை செய்து வருகிறாா்.

இவரது மனைவி பேபி (27), மகன்கள் நிதாா்ஷ் ரக்சன் (4),

ஒன்றரை வயது நிகில்தேவ் ஆகியோருடன் சொந்த ஊரில் வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நிதாா்ஷ் ரக்சன், நிகில்தேவ் ஆகியோா் முந்திரிப் பழம் சாப்பிட்டனா். அப்போது, நிகில்தேவின் மூச்சுக்குழாயில் பழத்துண்டு சிக்கியதால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

தொடா்ந்து உறவினா்கள் நிகில்தேவை துறையூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com