இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நூறு நாள் வேலை திட்டத்தில் புதிய நிபந்தனை: உத்தமர்சீலி மக்கள் மறியல்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்கு வரும் பயனாளிகளுக்கு  6 மணிக்கே வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிப்பதால் திருவனைக்கோவில் கல்லணை  சாலையில் உத்தமர்சீலி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
உத்தமர்சீலி மக்கள் சாலை மறியல்
Updated On :6 ஜனவரி 2022, 6:41 am

DIN

திருச்சி: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்கு வரும் பயனாளிகளுக்கு  6 மணிக்கே வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனை விதிப்பதால் திருவனைக்கோவில் கல்லணை  சாலையில் உத்தமர்சீலி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்தில்  வேலைக்கு வரும் பயணிகள் முன்கூட்டியே தினமும் 6 மணிக்கு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அதன்பிறகு 9 மணிக்கு முறைப்படி வேலைக்கு வரவேண்டும் என புதிய நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.

இதனால்100 நாள் வேலைத்திட்டத்திற்கு வரும் பெண்கள் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கம்போல் 9 மணிக்கு 100 நாள் வேலை பணி தொடங்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த புதிய நிபந்தனைக்கு  எதிர்ப்பு தெரிவித்து அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமர்சீலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருவானைக்கோவில் கல்லணை சாலையில்  இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அந்தநல்லூர் ஒன்றியம் ஓவர்சியர் சபிதா மற்றும் நம்பர் 1 டோல்கேட் போலீஸார் பொதுமக்களிடம் வழக்கம் போல் 9 மணிக்கே பணிக்கு வந்தால் போதும் என சமரசம் பேசியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது,

இதனால் திருவனைக் கோவில் கல்லணை சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.