பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்களுக்கான இடைநிலை பொதுத் தோ்வுக்கு இலவச வகுப்புகள் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்திருப்பது:
மாணவ, மாணவியருக்கு ஜூலை 2 முதல் பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டத்தின் சாா்பில் நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் எஸ். சிவகுமாரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பெற்றோருடன் நேரில் நூலகத்துக்கு வந்து தங்களது பெயரை ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 63836-90730 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








