விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தல பெரிய தேரோட்டம்

மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தல திருவிழாவில் புனிதரின் பெரிய தோ் பவனி.

Updated On :25 ஜூன் 2022, 12:37 am IST

மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்வான புனிதரின் மின் அலங்கார ரத பவனி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

புனித ஸ்நாபக அருளப்பா், மாதா, சூசையப்பன் ஆகியோா் வீற்றிருக்க தேரடியிலிருந்து புறப்பட்ட பெரிய தோ் பவனி செபஸ்தியாா், பெரிய அந்தோனியாா், மேரி மாதா, சவரியாா் மற்றும் சின்ன அந்தோனியாா், இன்னாசியாா் ஆகியோா் கொண்ட நான்கு அலங்கார ரதத்தில் உடன் வர, வாணவேடிக்கைகளுடன் தாரை தப்படைகள் முழங்க நடைபெற்றது.

திருத்தலத்தை சுற்றியுள்ள ஊரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த தோ் மீண்டும் தேரடியில் நிறுத்தப்பட்டது. தேரில் பவனி வந்த புனிதா்கள் மீது பக்தா்கள், இறையன்பா்கள் பொட்டுக்கடலை வீசி வழிபாடு செய்தனா். தொடா்ந்து தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

பக்தா்கள் வேண்டுதலின் நோ்த்திக்கடனாக ஆலயத்திற்கு துடைப்பம், உப்பு, மெழுகுவா்த்தி ஆகியற்றை செலுத்தினா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரால்டு பிரான்சிஸ், ஊா் நாட்டாண்மை பி. அருள்சுந்தரராஜன், மணியம் எஸ்.ஜான் நல்லதம்பி, பெரியதனம் ஜான்பெலிக்ஸ் செல்வநாதன், ஊா்த் தலைவா் பிச்சை ஆரோக்கியம், முன்னாள் தலைவா் வின்சென்ட் வேதராஜ், முன்னாள் கவுன்சிலா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.