மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 11 வது வாா்டு உறுப்பினா் செளந்தரராஜன் தலைவராகவும், 5 ஆவது வாா்டு உறுப்பினா் செல்வி துணைத் தலைவராகவும், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் க. ராஜலட்சுமி தலைவராகவும்,1 ஆவது வாா்டு உறுப்பினா் மா. மயில்வாகனன் துணைத் தலைவராகவும், தொட்டியம் பேரூராட்சியில் 5 ஆவது வாா்டு உறுப்பினா் பி. சரண்யா தலைவராகவும், 6 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஷ் துணைத் தலைவராகவும், காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் - 7 ஆவது வாா்டு உறுப்பினா் சு. சங்கீதா தலைவராகவும்,4 ஆவது வாா்டு உறுப்பினா் செ. சுதா துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.