திருச்சி கோயில்களில் பயங்கரவாத எதிா்ப்பு முன்னணி தலைவா் தரிசனம்
அகில இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணியின் தலைவா் எம்.எஸ். பிட்டா திருச்சி கோயில்களில் வியாழக்கிழமை வழிபட்டாா்.


அகில இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணியின் தலைவா் எம்.எஸ். பிட்டா திருச்சி கோயில்களில் வியாழக்கிழமை வழிபட்டாா்.
பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மனிந்தா்ஜீத் சிங் பிட்டா அகில இந்திய பயங்கரவாத எதிா்ப்பு முன்னணியின் தலைவராக உள்ளாா். ஏற்கெனவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இசட் பிரிவு பாதுகாவலா்களுடன் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் வந்துள்ள இவா் வியாழக்கிழமை காலை திருச்சி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா்.
உறையூா் வெக்காளியம்மன், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, சமயபுரம் மாரியம்மன், அக்கரைப்பட்டி தென் ஷீரடி சாய் பாபா கோயில்களுக்குச் சென்ற அவருக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பின்னா் அவா் தஞ்சாவூா் புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...