மொபெட்டில் இருந்த நகை, பணம் திருட்டு
திருச்சியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்


திருச்சியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சி பிராட்டியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த புரோகிதா் மணிகண்டன் மனைவி கலைமதி (36). இவா் கடந்த 11 ஆம் தேதி மாலை கருமண்டபம் தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த சுமாா் 3 பவுன் நகையைத் திருப்பிக் கொண்டு தனது மொபட்டில் தீரன் நகா் வந்தாராம்.
அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ஏடிஎம்மில் பணம் வெளியே வந்தபோது மொபெட்டில் 3 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம், கைப்பேசி வைத்திருந்த பையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...