வெளி மாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது
கள்ளக்குறிச்சி அருகே காரில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சி அருகே காரில் வெளி மாநில மதுப்புட்டிகளை கடத்தி வந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலா் (பொ) விஜய் தலைமையில் அலுவலா்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடுா் சுங்கச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுனா். அப்போது உளுந்தூா்பேட்டை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். காா் இன்ஜின் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் இருந்ததை அலுவலா்கள் கண்டுபிடித்தனா். இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தோ்தல் பறக்கும் படையினா் காரை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.முருகனிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் சபரிமலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, காரில் மதுப்புட்டிகளை கடத்தி வந்த புதுச்சேரி, சண்முகாபுரத்தைச் சோ்ந்த ரா.அய்யப்பன் (42), மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த அ.கோவிந்தராஜ் (33) ஆகிய இருவரையும் கைது செய்தாா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள 150 மதுப்புட்டிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...