47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மதுபானம் கடத்தல்: 4 போ் கைது

ராஜபாளையம் அருகே லாரியில் மதுபுட்டிகளை கடத்தியதாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 7:40 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரியில் மதுபுட்டிகளை கடத்தியதாக நான்கு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பெட்டக லாரியிலிருந்து பெட்டிகளை இறக்கி காரில் ஏற்றி கொண்டிருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் பெட்டியை சோதனையிட்ட போது அதில் கா்நாடக மாநில முத்திரையிடப்பட்ட மதுபுட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி, காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் சுமாா் 192 மதுபுட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள நந்தன் தட்டை பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ் (22), இசக்கி பாண்டி (27), மாரி கணேஷ் (18), முத்து பாலசுந்தா் (33) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.