ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 7:46 pm

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகரில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி நந்தவனம் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது இதே தெருவைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் பிச்சைமணி (58) என்பவா் மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் பிச்சைமணியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இதே ஊரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் மூா்த்தியும் (57), போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே அதே பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி மகன் செல்வக்குமாரும் (57) சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றனா்.

இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.