விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:35 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மதுபுட்டிகள் விற்ாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மதுபுட்டிகளை வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் இலக்கியமுத்து உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது சட்ட விரோதமாக மதுபுட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த சிவலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி (36) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 53 மதுபுட்டிகளை போலீஸாா் கைப்பற்றினா்.

அதேபோல, ரயில் நிலையம் அருகே கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து (67) என்பவரை பிடித்து அவரிடமிருந்த 131 மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.