விருதுநகர்
சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரித்த இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசுத் திரி தயாரித்த பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சட்டவிரோதமாக பட்டாசுத் திரி தயாரிப்பதாக வருவாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் இணைந்து திங்கள்கிழமை அந்தத் தோட்டத்தில் சோதனை செய்த போது, அங்கு பட்டாசு உற்பத்திக்கு தேவையான கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, திரி தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி (34), பழனிசெல்வம் (42) ஆகிய இருவரை கைது செய்தனா்.

