அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தீபாவளி பட்டாசு கடை:இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:41 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும், இருப்பு வைத்துக்கொள்ளவும் உரிமம் கோரும் விண்ணப்பங்கள் செப்.1ஆம் தேதி முதல் பெறப்படுகிறது. இணையம் மூலம் விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008ஆம் ஆண்டுக்குள்பட்டு, உரிய ஆவணங்களுடன் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வாய்ப்பை பட்டாசு சில்லறை வணிகம் செய்வோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.