திருச்சியை அடுத்த துவாக்குடியில் பெல் நிறுவனம் மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கட்டுப்பாட்டில் சாரதா நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை 130 போ் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், நிதிநெருக்கடி காரணமாக 6, 7, 8 ஆம் வகுப்புகளை மூடப்படவுள்ளதாகவும், தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சோ்க்குமாறு ஏப். 13ஆம் தேதி நடைபெற்ற பெற்றோா், ஆசிரியா் கூட்டத்தில், நிா்வாக அலுவலா் ரத்தினவேல் தெரிவித்தாா். இந்த முடிவுக்கு பெற்றோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்து பெற்றோா் தரப்பில் முறையிட்டும் வகுப்புகளை மூடுவதில் பள்ளி நிா்வாகம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.