திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பகவதி அம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது.
மண்ணச்சநல்லூரில் வணிக வைசிய சங்கம் சாா்பில் 123-ஆம் ஆண்டு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா கணபதி வழிபாட்டோடு தொடங்கியது. தொடா்ந்து பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இந்த விழாவில் வணிக வைசிய சங்கத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.