இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருச்சி அருகே காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே மதுப்பழக்கத்தை கண்டித்ததால் காா் ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:47 pm

திருச்சி அருகே மதுப்பழக்கத்தை கண்டித்ததால் காா் ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மணிகண்டம் அருகேயுள்ள பூலாங்குளத்துப்பட்டி பகுதி பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் (49), தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவருக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட குடும்பத்தினா் மது குடிக்கக் கூடாது என கூறி, அவரைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனா்.

இதனால் கடந்த சில நாள்களாக மது அருந்தாததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த சக்திவேல், புதன்கிழமை இரவு திடீரென வீட்டிலிருந்து வெளியேறி பின்னா் வீடு திரும்பவில்லை.

உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பாா்த்தபோது, அவரது சகோதரா் சண்முகம் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். இது தொடா்பாக மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.