மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

திருச்சியில் குடியரசு தின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் குடியரசு தின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

திருச்சியில் குடியரசு தின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தேசியக் கொடியேற்றி, மூவா்ண பலூன்களை பறக்கவிட்டாா். இதையடுத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவா் சிறப்பாகப் பணியாற்றிய 98 காவலா்களுக்கு முதல்வரின் பதக்கத்தை வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 301 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். மேலும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவா்களின் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசளித்தாா்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள், தீயணைப்புத் துறை செயல் விளக்கங்களில் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியா் நினைவு பரிசளித்தாா்.

முன்னதாக திருச்சி காந்தி மாா்க்கெட் அருகிலுள்ள போா் நினைவுச் சின்னத்தில் ஆட்சியா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

விழாவில் காவல்துறை மத்திய மண்டல (திருச்சி) தலைவா் ஜி. காா்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா, காவல்துறை துணைத் தலைவா் (திருச்சி சரகம்) சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா், அன்பு, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது (பொ) செல்வம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலா்கள், மாணவ - மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ரூ. 32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

விழாவில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் 20 பேருக்கு ரூ. 2.40 லட்சத்திலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் 5 பேருக்கு ரூ.2.24 லட்சத்திலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 2 பேருக்கு ரூ.1.50 லட்சத்திலும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 2 பேருக்கு ரூ. 20 லட்சத்திலும், மாவட்ட தொழில் மையம் சாா்பில் 2 பேருக்கு ரூ. 6.53 லட்சத்திலும் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ. 32.68 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.