துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மணப்பாறையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மணப்பாறையில் பாத்திமா மலை பகுதியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

News image
பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்
Updated On :29 ஜூன் 2023, 5:05 am

DIN

 
மணப்பாறையில் பாத்திமா மலை பகுதியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் திருநாளாம் ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி மணப்பாறை பாத்திமா மலையில் ஈத்கா திடல் அமைக்கப்பட்டு ஈகைத்திருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஈகைப்பெருநாள் தொழுகைக்கு பின் உலக நலன் வேண்டி, நாடு வளமாகவும், நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் தூஆ கேட்டு சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது.

தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியினையும் பகிர்ந்துகொண்டனர். 

இதேபோன்று புத்தாநத்தம், இளங்காகுறிச்சி, வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய பகுதிகளிலும் சிறப்புத் தொழுகையும், கூட்டு பிராத்தனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.