துறையூரில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் செந்தில் தலைமை வகித்தாா். மண்டல செயலா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை முழுநேரம் இயக்குதல், ஆள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்தல், சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளா்களை பணிக்கு மீண்டும் அமா்த்துதல், உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாநிலக் குழு உறுப்பினா் வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.