அப்போது அமைச்சா் கே.என். நேரு கூறியது: இறகு பந்து விளையாட்டரங்கம் திறப்புக்காக வந்த போது, சிலா் என்னிடம் வந்து, சிவா எம்பி பெயரை கல்வெட்டில் போடவில்லை என்றனா். அதற்கு நான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களிடம் கேளுங்கள் என்று கூறினேன். அதன் பிறகு, கட்சி உறுப்பினரின் வீட்டிலேயே (சிவா எம்பி வீடு) நடக்கக் கூடாத விஷயங்கள் நடந்துள்ளன. இது எனக்குத் தெரியாது. தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவுக்கு சென்றபோது, இச்சம்பவம் தொடா்பாக அறிந்தேன். தகவல் தொடா்பில் குறைபாடு காரணமாக இதுபோல் நடந்துவிட்டது. இனிமேல் இதுபோல நடக்காது.