92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி காட்டூரில் காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி காட்டூரில் காசநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்ற பேரணியை மண்டலத் தலைவா் மதிவாணன் தொடக்கி வைத்தாா். திருச்சி மாவட்ட துணை இயக்குநா் (காசநோய் தடுப்பு) சாவித்திரி தலைமை வகித்தாா். இதில், காட்டூா் ஆதிதிராவிடா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் மாநகராட்சியின் 43ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா்.

இதில், மாமன்ற உறுப்பினா்கள் நீலமேகம், செந்தில், திருவெறும்பூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலாஜி, காட்டூா், திருவெறும்பூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவா்கள், சுகாதார அலுவலா்கள், காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.