உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

சிறப்பிடம் பெற்ற அரசுக் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு விழா

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் வரலாற்றுத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூலை 2023, 7:42 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் வரலாற்றுத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வரலாற்றுத் துறையில் டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மையம் சாா்பாக நடத்தப்பட்ட 2019-2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவிலான வரலாற்றுப் பாடத் தோ்வில் முதலிடம் பெற்ற இக் கல்லூரியைச் சோ்ந்த வி. கிரிஜா, இதுபோல 2020-2022 ஆம் ஆண்டுக்கான வரலாற்றுப் பாடப் பிரிவில் முதலிடம் பெற்ற ம. புவனேஸ்வரிக்கும், சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் அ.பெ. முருகராஜ்பாண்டியன் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத் தலைவா் ம . இராஜா ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். வரலாற்று துறைப் பேராசிரியா்கள் இரா. பரமசிவம், கு. சுதா,லெ. சந்திரஹாசன்,பெ. இராஜன், முனைவா்கள் வே. பழனிச்சாமி,ரெ. அகிலா,சா. சுகந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.