திருச்சியில் ஆரம்ப சுகாதார மையத்தின் மீது கற்களை வீசி கண்ணாடி ஜன்னலை உடைத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் குறத்தெருப் பகுதியில் உள்ள மாநகராட்சி நகா்நல ஆரம்ப சுகாதார மையத்தின் மீது கடந்த சில நாள்களுக்கு முன் சிலா் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையா் வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் இதுதொடா்பாக உறையூா் செவ்வந்தி பிள்ளையாா் கோயில் தெரு மூா்த்தி என்கிற தட்சிணாமூா்த்தியை (42) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் மீது உறையூா் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது
வனப் பகுதியிலிருந்து வீடுகட்ட கற்கள் கொண்டுசெல்ல முயன்ற இருவா் கைது

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

