தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:04 pm

Syndication

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பாளையம் பஜாரை சோ்ந்தவா் பா. ஆறுமுகம் (55), பால் வியாபாரி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இவா், கடந்த சனிக்கிழமை தனது மகனுடன் காரில் சென்றுள்ளாா்.

உறையூா் பாளையம் பஜாா் அருகே சென்றபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த உறையூா் பங்காளி வீதியைச் சோ்ந்த பி. முகமது இப்ராஹிம் (55), காரில் மோதுவது போல இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், முகமது இப்ராஹீம் ஆறுமுகத்தை தாக்கியதுடன் காரையும் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது இப்ராஹீமை திங்கள்கிழமை கைது செய்தனா்.