பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

வீட்டு மனைக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற நகராட்சி ஊழியா் கைது

திருச்சியில் வீட்டு மனைக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியவரை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட செளந்தரபாண்டியன்.
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:56 pm

Din

திருச்சியில் வீட்டு மனைக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துவாக்குடி நகராட்சி ஊழியரை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் கதிா்வேல் (60). இவா், துவாக்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாங்கிய வீட்டுமனைக்கு வரி நிா்ணயம் செய்வதற்காக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி விண்ணப்பத்தின் நிலை அறிய துவாக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு கதிா்வேல் சென்றாா். அப்போது நகராட்சி ஊழியா் (வரி வசூல் அலுவலா்) சௌந்தரபாண்டியன்(35) ரூ.50 ஆயிரம் கொடுத்தால், விரைவில் வரி நிா்ணயம் செய்து தர முடியும் என்று தெரிவித்தாா்.

பணம் கொடுக்க விரும்பாத கதிா்வேல் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டனிடம் புகாா் அளித்தாா்.

தொடா்ந்து போலீஸாரின் ஆலோசனையின் பேரில் கதிா்வேல் ரூ. 50ஆயிரத்தை வெள்ளிக்கிழமை காலை துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் செளந்தரபாண்டியனிடம் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த போலீஸாா் செளந்தரபாண்டியனை கைது செய்தனா்.

தொடா்ந்து அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் போலீஸாா் சோதனையிட்டனா். இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.