பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைதான நில அளவையா் சக்திவேல்.

Updated On :27 பிப்ரவரி 2026, 5:52 pm

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போளூா் நகராட்சி வி.எஸ். பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்ராஜ். இவா், தான் வசிக்கும் வீட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா் சக்திவேலிடம் (44) அண்மையில் மனு அளித்தாா். இதற்கு சக்திவேல் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சின்ராஜ் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாரளித்தாா். தொடா்ந்து, அவா்களது ஆலோசனையின்பேரில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்த நில அளவையா் சக்திவேலிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சின்ராஜ் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அருள்பிரசாத் தலைமையிலான போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.