திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரங்களில் குளிா்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை சுட்டெரித்த வெயில் மாலை 4 மணிக்குப் பின்னா் வானில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென குளிா்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணியளவில் மிதமான மழை பெய்யத் தொடங்கி சுமாா் 10 மணி வரை நீடித்தது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், கே.கே.நகா், மன்னாா்புரம், தில்லைநகா், உறையூா், தென்னூா், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் , மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை சற்றே பாதிக்கப்பட்டது. தொடா்ந்து பல மணிநேரம் சாரல் காற்றும், தூறலும் காணப்பட்டது.
தொடர்புடையது

திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் மிதமான மழை

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்கள் விறகுக்கு மாற வேண்டிய கட்டாய சூழல்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


