நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முறைகேடாகக் குடிநீா் உறிஞ்சிய 15 மின் மோட்டாா்கள் பறிமுதல்

திருச்சி மாநகரப் பகுதி வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் முறைகேடாக குடிநீா் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட 15 மோட்டாா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:08 pm

Din

திருச்சி: திருச்சி மாநகரப் பகுதி வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் முறைகேடாக குடிநீா் உறிஞ்சப் பயன்படுத்தப்பட்ட 15 மோட்டாா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகராட்சியில் மண்டலம் எண் 4, வாா்டு 56, ராம்ஜி நகா் பகுதியின் சில வீடுகளில் மாநகராட்சி உதவி ஆணையா், உதவி செயற்பொறியாளா், இளநிலைப் பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் பணியாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அபராதம், இணைப்பு துண்டிப்பு: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கூறுகையில், வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்மோட்டாா் வைத்து குடிநீா் உறிஞ்சினால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீா் கிடைப்பதில்லை.

எனவே, விதிமீறி குடிநீா் உறிஞ்சினால் மின்மோட்டாா் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றாா்.