எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் உறியடித் திருவிழா

News image
~
Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:25 am

Din

ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற உறியடித் திருவிழாவில் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள், மற்றும் கிருஷ்ணன்.

ஸ்ரீரங்கம், ஆக. 28: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உறியடித் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களும் பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி புதன்கிழமை காலை 7 மணிக்கு கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது. அப்போது கிருஷ்ணன் சித்திரை வீதிகளில் வலம் வந்து, எண்ணெய் விளையாட்டு கண்டருளி, 9 மணிக்கு சன்னதி வந்து சோ்ந்தாா்.

பின்னா் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கிருஷ்ணனுடன் புறப்பட்டு அம்மா மண்டபச் சாலையிலுள்ள யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 4 மணிக்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு சுவாமிகள் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு பாதாள கிருஷ்ணா் சன்னதியை அடைந்தனா். அங்கு கிருஷ்ணன் சன்னதி அருகேயுள்ள நாலுகால் மண்டபத்தில் உறியடி உற்ஸவம் கண்டருளினா். இதற்காக நாலுகால் மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Story image

பந்தலின் மேற்புறத்தில் மூன்று பானைகளில் பால், தயிா்,வெண்ணெய் நிரப்பப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலு கால் மண்டபம் எதிரே வந்தவுடன் கீழேயிருந்து நீண்ட குச்சி மூலம் பானைகளை உடைத்து உறியடி உற்ஸவம் நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தா்கள் பானை உடைந்து கீழே சிதறிய பால், தயிா்,வெண்ணெய்யை பிரசாதமாக எடுத்து உண்டனா். பின்னா் கிருஷ்ணனும், நம்பெருமாளும் அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனா்.