தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்துப் போராட்டம்: 225 போ் கைது

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் தடையை மீறி போராட்டம் மேற்கொண்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 225 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

திருச்சி மரக்கடையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினா்.

Updated On :4 டிசம்பர் 2024, 9:54 pm

Din

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து திருச்சியில் தடையை மீறி போராட்டம் மேற்கொண்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்த 225 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மரக்கடை பகுதியில் திருச்சி மாவட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலா் பேராசிரியா் சீனிவாசன் சிறப்புரையாற்றினாா். பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன், புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், மாநில பொதுச்செயலாளா் கெளதம் நாகராஜன், மாநில வா்த்தக அணி செயலா் முரளீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும் அகில பாரதிய வித்யா பரிஷத் மாநில இணை அமைப்பாளா் சந்தோஷ், பாஜக இளைஞரணி மாநிலச் செயலா் நாகராஜன், மாநில மகளிரணி துணைத் தலைவி புவனேஸ்வரி, பாரதிய மஸ்தூா் சங்க மாவட்டச் செயலா் பாஸ்கா், விஎச்பி மாவட்டத் தலைவா் சுதாகா் உள்பட பல்வேறு இந்து அமைப்பினா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட மொத்தம் 225 பேரை போலீஸாா் கைது செய்து மதுரை சாலையில் உள்ள தனியாா் திருமண மஹாலில் அடைத்தனா்.