தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

துறையூரில் பயனாளிகளுக்கு ரூ. 24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

News image
Updated On :19 ஜூலை 2024, 8:35 pm

Din

துறையூா், ஜூலை 19: துறையூா் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 24.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.என்.நேரு வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். துறையூா் எம்.எல்.ஏ. செ. ஸ்டாலின்குமாா், முசிறி எம்.எல்.ஏ. காடுவெட்டி ந. தியாகராஜன், துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, துறையூா் சின்ன ஏரி கிழக்குக் கரையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த தரைக்கடைகளின் உரிமையாளா்கள் 20 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா். தொடா்ந்து இலவச வீட்டு மனைப் பட்டா, இலவச தையல் இயந்திரம் உள்பட மொத்தம் ரூ. 24 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில்,துறையூா் நகா்மன்ற துணைத் தலைவா் ந.முரளி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.