திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கீழ் செயல்பட சட்டத் தன்னாா்வத் தொண்டா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். சேவைப்பணியான இது முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை ஊதியம் ஏதும் இல்லை. சேவைக்குத் தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.
இப்பணிக்கு, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியா்கள்), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் மற்றும் மூத்த குடிமக்கள், எம்எஸ்டபிள்யூ பயிலும் மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் (வழக்குரைஞராகப் பதிவு செய்யும் வரை), சமூக ஆா்வலா்கள் (அரசியல் கட்சி சாரா தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள்), மகளிா் சுயஉதவிக்குழுக்கள், திருநங்கைகள், அடிப்படை கல்வித் தகுதி உடைய சேவை மனப்பான்மை உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுடையவா்கள், மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

சட்ட விரோத மணல் திருட்டு விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

100% வாக்குப்பதிவுக்கு நூதன அழைப்பு

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

