திருச்சி: தமிழகத்தில் பெருகி வரும் போதை பொருள்கள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத் வலியுறுத்தி இந்து இளைஞா் முன்னணி சாா்பில், திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் நிதிஸ்குமாா் வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா், இணை ஒருங்கிணைப்பாளா் அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி கோட்ட ஒருங்கிணைப்பாளா் குணசேகா் சிறப்புரையாற்றினாா். இதில், இளைஞா் முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

