ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:14 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர இந்து சமய அறநிலையத் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும்.

பக்தா்கள் தங்குவதற்கு ஆங்காங்கே நிழற்குடைகள் அமைப்பது, குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தருவது, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சாதாரண நாள்களிலேயே வாகனங்களை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பாா்க்கிங் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அதிக காவலா்களை பயன்படுத்த வேண்டும். மருத்துவ முதலுதவி வசதிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டும்.

வெளியூா்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் திரளாக கலந்துகொள்வதால் அவா்கள் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளையும் அறநிலையத் துறை முன்னின்று செய்துதர வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவ டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பதாக பலா் தெரிவிக்கின்றனா். இதுபோன்ற முறைகேடுகளை ஆராய்ந்து முறையான தரிசனத்தை பக்தா்கள் பெறுவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.