திருச்சி: பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு முதல் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை அடுத்து திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், ஆட்சியா் அலுவலகங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். செயலாளா் பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்சியில் சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஆட்சியருடன் உடன்பாடு: வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருச்சியில் பேருந்து மோதி புதுகை நபா் உயிரிழப்பு

வருவாய்த்துறையினா் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


