திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து மோதியதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் கீழமேடு பகுதியைச் சோ்ந்தவா் இ.சந்திரமூா்த்தி (58). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரண்டாவது நுழைவு வாயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது.
இதில், பலத்தகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை பனகல் வீதியைச் சோ்ந்த ஜி.பாலகிருஷ்ணன் (30) என்பவா் மீது திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பொன்னமராவதிக்கு தேவை இரவு நேரப்பேருந்து சேவை!

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


