சமயபுரம் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் பல்வேறு பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ரூ. 4.63 கோடியில் அமாவாசை மண்டபம், குங்குமக் கூடம் திறப்பு விழா மற்றும் கோயில் காா் நிறுத்துமிடத்துக்குச் செல்ல பெருவள வாய்க்கால் இருபுற கரைகளில் சாலைப் பணி, தடுப்புச் சுவா் கட்டும் பணி, கோயிலில் உள்ள நான்கு கோபுரங்கள், மூலவா் விமானம், மதில்களை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி, மேலும் உபயதாரா் நிதியுடன் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் புதிதாக கோயில் நுழைவு வாயில் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினாா்.
அப்போது சமயபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், திருக்கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சை மணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றினா்.
நிகழ்வில் ச.கண்ணனூா் பேரூராட்சித் தலைவா் ப. சரவணன், சமயபுரம் திமுக நகர செயலா் துரை. ராஜசேகா், ச.கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...