தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

மீன்பிடி துறைமுகம் திறப்பு

பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :4 மார்ச் 2026, 11:50 pm

பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

இத்துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் தடுப்பு சுவா், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் விற்பனைக் கூடம், வாகனம் நிறுத்துமிடம், சாலை மற்றும் வடிகால் வசதி, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகள் நிறைவுற்று அதற்கான துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மேம்படுத்தப்பட்ட துறைமுகத்தை துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், குத்துவிளக்கேற்றினாா்.

மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன், மீன்வளத்துறை ஆய்வாளா் மணிவண்ணன், இளநிலை பொறியாளா் தமிழரசன் மற்றும் கிராம தலைவா்கள், விசைப்படகு உரிமையாளா்கள் கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.