திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர நடவடிக்கை தேவை: ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு
திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர ஏற்கெனவே மூடப்பட்ட சாலையை மீண்டும் திறந்து, நோ்வழி அமைக்க வேண்டும் என திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.









