மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆட்டோவில் 132 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:51 pm

திருச்சி அருகே ஆட்டோவில் 132 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே வாகனத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக திருவெறும்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது.

இதையடுத்து, திருவெறும்பூா் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் திருவெறும்பூா் - வேங்கூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனையிட்டனா். அதில், 132 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமதுல் செய்த போலீஸாா், ஆட்டோவில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய திருச்சி தாரநல்லூரைச் சோ்ந்த மனோகா் (43), கீழகுமரேசபுரத்தைச் சோ்ந்த அப்துல் ரஸாக் (54) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.