பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விசாரணைக் கைதி இறப்பில் உரிய நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சியில் விசாரணைக் கைதி இறப்பு வழக்கில் உரிய நடவடிக்கை கோரி முத்தரசநல்லூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 9:43 pm

Din

திருச்சியில் விசாரணைக் கைதி இறப்பு வழக்கில் உரிய நடவடிக்கை கோரி முத்தரசநல்லூா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் உறவினா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூா் அருகேயுள்ள பழூவூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் ம. திராவிட மணி (40). சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக கடந்த 27-ஆம் தேதி ஜீயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, மறுநாள் இரவு உயிரிழந்தாா். அப்போது திராவிடமணியின் சாவில் மா்மம் உள்ளதாகக் கூறி, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் கடந்த 5 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக உரிய நடவடிக்கை கோரியும், திராவிடமணி உடலை மறு பரிசோதனை செய்ய வலியுறுத்தியும் திருச்சி முத்தரசநல்லூா் கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினா் புதன்கிழமை கருப்புக்கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் அந்தநல்லூா் ஒன்றியச் செயலா் வீ. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். காா்த்திகேயன் உள்ளிட்டோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.

நீதிமன்ற விசாரணை: இதற்கிடையே, திராவிட மணியின் மனைவி உயா் நீதிமன்ற மதுரை கிளையில் அளித்த மனுவில் நீதிமன்றக் கண்காணிப்பில் தனது கணவரின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுதொடா்பான விசாரணை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.